
அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணியை வேகப்பந்துவீச்சின் மூலம் கட்டுப்படுத்த எண்ணியுள்ளதாக அவர் தெரிவிக்கிறார்.
தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 81 ஓட்டங்களால் இலங்கை தோல்வியடைந்தது.
மூன்று நாட்களில் முடிவுக்குவந்த இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியால் ஓர் இன்னிங்ஸில் கூட 200 ஓட்டங்களை எட்டமுடியவில்லை.
இதேநிலை அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தொடரும் எனவும், இலங்கை அணியை பிரகாசிக்கவிடப் போவதில்லை என்றும் அலன் டெனால்ட் குறிப்பிடுகிறார்.
இலங்கை பலமான அணி என்றாலும் தென் ஆபிரிக்காவின் வேகப்பந்துவீச்சுக்கு உகந்த ஆடுகளங்களில் தமது வீரர்களால் பிரகாசிக்க முடியும் எனவும் அணியின் பந்துவீச்சு பயிற்றுநரான டொனால்ட் சுட்டிக்காட்டுகிறார்.
இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி டேர்பனில் ஆரம்பமாகவுள்ளது.
No comments:
Post a Comment