
20 லட்சம் டொலர் பணத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு வழங்காமல் வீரர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வைப்பிலிட்டுள்ளதாக தெரிய வருவதாகவும் கிரிக்இன்போ தெரிவித்துள்ளது.
உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றியமைக்காக நாடொன்றுக்கு வழங்கப்பட வேண்டிய பணத்தில் 25 சதவீதம் வீரர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இதன்படி இலங்கை வீரர்களுக்கு 43 லட்சம் டொலர் வழங்கப்பட வேண்டியிருந்தது.
இந்நிலையில் ஒவ்வொரு வீரருக்கும் வழங்கப்பட வேண்டிய தொகை மற்றும் வங்கிக் கணக்கு இலக்கங்களை ஐ.சி.சிக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்திருந்ததாகவும் இக்கொடுப்பனவு குறித்து அறிந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
இக்கொடுப்பனவு தொடர்பான ஏற்பாடுகள் குறித்து சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் சங்கங்களின் சம்மேளனத்திற்கும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டொனி ஐரிஸ் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிதி நெருக்கடி காரணமாக இலங்கைக் கிரிக்கெட் வீரர்களுக்கு கடந்த 8 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு ஐ.சி.சி. 20 லட்சம் டொலர் வழங்க இணங்கியுள்ளதாகவும் அதன்மூலம் பயிற்றுநருக்கும் வீரர்களுக்கும் சம்பளம் வழங்கப்பட முடியும் எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறியிருந்தார்.
உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக ஹம்பாந்தோட்டை, பள்ளேகலவில் இரு புதிய அரங்குகளை நிர்மாணிப்பதற்கும் ஆர்.பிரேமதாஸ அரங்கை புனரமைப்பதற்கும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பணம் செலவிட்டதையடுத்து அந்நிறுவனம் 32.5 மில்லியன் டொலர் கடனில் சிக்கியுள்ளதால் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
No comments:
Post a Comment