Wednesday, December 14, 2011

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் எனது முழுதிறமையை வெளிப்படுத்துவேன்: ரோஹித் சர்மா

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடினார். இதைத்தொடர்ந்து டெஸ்ட் போட்டியிலும் இடம்பெற ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார்.
அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டிக்கு நான் கடுமையான பயிற்சி மூலம் தயாராக இருந்தேன்.
அதனால் தான் சிறப்பாக ஆடி இருக்கிறேன். நான் எப்போது போட்டியில் ஆடினாலும் 100 சதவிகித திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைப்பேன்.
இந்த போட்டியில் ஓரளவு திறமையாக ஆடினேன். எனக்கு டெஸ்ட் போட்டியிலும் ஆட வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறது. அந்த கனவு நனவாகும் என்று எதிர்பார்க்கிறேன்.
இதற்காக எல்லா முயற்சிகளையும் செய்வேன். தற்போது எனக்கு 25 வயது ஆகிவிட்டது. டெஸ்ட் போட்டிக்கு செல்வதற்கு இதுதான் சரியான வயது என்று கருதுகிறேன். டெஸ்ட் போட்டியில் ஆடுவது என்பது மிகவும் பொறுப்பான செயல்.
இனிவரும் போட்டிகளில் இன்னும் அதிக கவனம் செலுத்தி விளையாடி நல்ல பெயரை எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எந்தவொரு சந்தர்ப்பத்தையும் நான் கைவிட மாட்டேன். எனது முன்னேற்றத்திற்கு ரஞ்சி கோப்பை போட்டி மிகவும் உதவியாக இருந்தது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடந்த போட்டிகளில் சில தவறுகளை செய்தேன். அதிலிருந்து பாடங்களை கற்றுக் கொண்டுள்ளேன். இந்த ஆட்டம் என்னை ஊக்கப்படுத்துவதாக உள்ளது. அவுஸ்திரேலியா போட்டியிலும் இதை போல சிறப்பாக ஆடுவேன் என எதிர்பார்க்கிறேன்.

No comments:

Post a Comment