Tuesday, December 20, 2011

பாகிஸ்தானுக்கு எதிராக சதம் பெற்றது மகிழ்ச்சி: ஷகீப் அல் ஹசன்








பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதம் பெற்றமை குறித்து பங்களாதேஷ் அணி வீரர் ஷகீப் அல் ஹசன் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.
மீர்பூரில் நடைபெறும் இந்தப் போட்டியில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தமை தொடர்பில் சற்று ஏமாற்றம் அடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தப் போட்டியில் பங்களாதேஷ் அணியின் முதல் இன்னிங்ஸில் 14 பௌண்ரிகள் அடங்கலாக 144 ஓட்டங்களை ஷகீப் அல் ஹசன் பெற்று அணியை வலுப்படுத்தியிருந்தார்.
இந்த சதத்தினைப் பெறுவதற்கு தான் கடுமையாக உழைத்ததாகவும், மிகவும் திருப்தியான ஒரு சதமாக இது அமைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment