Wednesday, December 21, 2011

வெற்றியை நோக்கி பாகிஸ்தான்

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 154.5 ஓவர்களில் 470 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
மிஸ்பா உல் ஹக் 70, அட்னன் அக்மல் 53 ரன்கள் குவிக்க அந்த அணி வலுவான ஸ்கோரை எட்டியது.
132 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ûஸ விளையாடிய வங்கதேசம், 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 35 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தானின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட அந்த அணி இன்னும் 18 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.
வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் ஆடிய வங்கதேசம் தனது முதல் இன்னிங்ஸில் 107.2 ஓவர்களில் 338 ரன்கள் குவித்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்ûஸ விளையாடிய பாகிஸ்தான் 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 292 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது நாளான செவ்வாய்க்கிழமை தொடர்ந்து ஆடிய அந்த அணியில் யூனிஸ் கான் மேலும் ஒரு ரன் மட்டுமே சேர்த்த நிலையில் 49 ரன்களில் வீழ்ந்தார். மிஸ்பா உல் ஹக் 11 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் குவித்து வெளியேறினார். இது டெஸ்ட் போட்டியில் மிஸ்பா உல் ஹக் அடித்த 14-வது அரைசதம்.
பின்வரிசையில் ஆசாத் ஷபிக் 42, அட்னன் அக்மல் 53 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க அந்த அணியின் முதல் இன்னிங்ஸ் 470 ரன்களில் முடிவுக்கு வந்தது. வங்கதேசம் தரப்பில் ஷகிப் அல்ஹசன் 82 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
வங்கதேசம்-114/5: 132 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ûஸ விளையாடிய வங்கதேச அணியில் தமிம் இக்பால் 21 ரன்களில் வீழ்ந்தார். உமர் குல் பந்துவீச்சில் சிலிப் திசையில் நின்ற மிஸ்பா உல் ஹக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் டி.வி.ரீபிளேயில் பார்த்தபோது பந்து பேட்டில்படவில்லை என்பது தெரியவந்தது.
பின்னர் வந்தவர்களில் ஷாரியார் நபீஸ் டக் அவுட் ஆனார். நஜ்முதீன் 12, மகமதுல்லா 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 4-வது நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேசம் 5 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்துள்ளது. நாசிர் ஹுசைன் 30, முஷ்பிகுர் ரஹிம் 7 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
பாகிஸ்தான் தரப்பில உமர் குல், சீமா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
கடைசி நாள் ஆட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது. இந்த ஆட்டம் டிராவில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வங்கதேசம் தனது 2-வது இன்னிங்ஸில் விரைவாக விக்கெட்டுகளை இழந்துள்ளதால், பாகிஸ்தானின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது.
கடைசி நாளான புதன்கிழமை, வங்கதேசத்தின் மீதமுள்ள 5 விக்கெட்டுகளையும் மதிய உணவு இடைவேளைக்குள் வீழ்த்தும் பட்சத்தில் இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றிபெற முடியும்.
காலையில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் அது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமையும். அதனால் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் வங்கதேசத்தை விரைவாக ஆட்டமிழக்கச் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் வங்கதேச வீரர் ஷகிப்: இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதமடித்ததோடு (144 ரன்கள்), 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் ஷகிப் அல்ஹசன். இதன்மூலம் இந்த சாதனையை நிகழ்த்திய முதல் வங்கதேச வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். செவ்வாய்க்கிழமை ஆட்டத்தில் பாகிஸ்தானின் 7 விக்கெட்டுகளில் 5-ஐ அல்ஹசனே வீழ்த்தினார். டெஸ்ட் போட்டியில் 9-வது முறையாக 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்தியுள்ளார் அல்ஹசன்.

No comments:

Post a Comment