Wednesday, December 21, 2011

இந்தியா - அவுஸ்திரேலியா இடையேயான இரண்டாவது பயிற்சி போட்டி சமன்

அவுஸ்திரேலியா சேர்மன் லெவன் அணிக்கு எதிரான இரண்டாவது பயிற்சி போட்டியில் இந்திய வீரர் விராத் கோஹ்லி சதம் அடித்து அசத்தினார்.
நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய அணி அவுஸ்திரேலியா சென்றுள்ளது. முதல் டெஸ்ட் வரும் 26ம் திகதி மெல்போர்னில் தொடங்குகிறது.
இதற்கு முன் இந்தியா, அவுஸ்திரேலியா சேர்மன் லெவன் அணிகள் மோதும் இரண்டாவது பயிற்சி போட்டி கான்பெராவில் நடக்கிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 162 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
நேற்று(20.12.2011) இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. ரோகித் சர்மா(47) அரைசத வாய்ப்பை இழந்து வெளியேறினார். அணித்தலைவர் தோனி(3) நிலைக்கவில்லை. மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராத் கோஹ்லி சதம் அடித்தார். இவர் 132 ஓட்டங்கள்(18 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார்.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 269 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சேர்மன் லெவன் அணியின் ஹாலந்து 6 விக்கெட் வீழ்த்தினார்.
பின் முதல் இன்னிங்சை தொடங்கிய சேர்மன் லெவன் அணியின் தலைவர் வார்னரை(2), முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி தந்தார்.
கவாஜா 25 ஓட்டங்கள் எடுத்தார். ஹியுஜ்(20), கூப்பர்(38), அஷ்வின் சுழலில் வீழ்ந்தனர். சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த கோவன் சதம் அடித்தார். இவர் 109 ஓட்டங்களுக்கு அஷ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் அவுஸ்திரேலிய லெவன் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 215 ஓட்டங்கள் எடுத்தது.
இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 90 ஓட்டங்கள் எடுத்த நிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்தது. தொடர்ந்து ஆடிய அவுஸ்திரேலிய லெவன் அணி விக்கெட் இழப்பின்றி 100 ஓட்டங்கள் எடுத்தது. இதன் மூலம் இரண்டாவது பயிற்சி போட்டியும் சமன் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment