Saturday, December 31, 2011

அவுஸ்திரேலியாவில் படுதோல்வி: முடங்கி கிடக்கும் இந்திய அணி வீரர்கள்

டோனி தலைமையிலான இந்திய கிரிக்கட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.
இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித் தொடரில் மெல்போர்னில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 122 ஓட்டங்களில் மோசமாக தோற்றது.
இரு அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி வருகிற 3ந் திகதி சிட்னியில் தொடங்குகிறது. மெல்போர்ன் டெஸ்டில் ஏற்பட்ட தோல்வி காரணமாக இந்திய வீரர்கள் ஓட்டல் அறையிலேயே முடங்கி கிடக்கின்றனர். மீடியாக்கள், ரசிகர்களை சந்திப்பதை தவிர்க்கும் விதமாக இந்திய வீரர்கள் அறையிலேயே இருக்கின்றனர்.
இந்திய வீரர்கள் மெல்போர்னில் இருந்து இன்று சிட்னி புறப்பட்டு செல்வார்கள். சிட்னி துறைமுகத்தில் புத்தாண்டு கொண்டாடுவார்கள்.
நாளை பிற்பகல் இந்தியா- அவுஸ்திரேலியா வீரர்கள் அவுஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கில்லரர்டை புத்தாண்டு தினத்தையொட்டி சந்திக்கிறார்கள். 2-வது டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்திரேலியா அணியில் ரியான் ஹாரிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment