Friday, December 16, 2011

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தீவிர பயிற்சி எடுத்து வருகிறேன்: டிராவிட்

இந்திய - அவுஸ்திரேலியா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26ந் திகதி மெல்போர்னில் தொடங்குகிறது.
இந்த போட்டிக்கு தயாராகும் விதமாக இந்திய அணி தற்போது அவுஸ்திரேலியாவில் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் டிராவிட் கூறுகையில், நான் நல்ல பார்மில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனினும் பார்மில் இருந்தால் மட்டும் ஓட்டங்களை குவித்துவிட முடியாது.
அவுஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதற்காக தீவிர பயிற்சி எடுத்து வருகிறேன். அவுஸ்திரேலிய தொடரை வெல்ல வேண்டும் என்றால் அணியில் குறைந்தது 8 வீரர்களாவது சிறப்பாக ஆட வேண்டும்.
தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே கிண்ணத்தை வெல்ல முடியும் என்றார்.

No comments:

Post a Comment