Friday, December 23, 2011

பங்களாதேஷ் வீரர்களின் தவறுகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது : ஸ்ரூவோட் லோ

பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்களின் களத்தடுப்பு தவறுகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாதென அந்த அணியின் பயிற்றுவிப்பாளர் ஸ்ரூவோட் லோ தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் போது பங்களாதேஷ் வீரர்கள் பிடிகளை தவறவிட்டமை குறித்து ஸ்ரூவோட் லோ அதிர்ப்தி வெளியிட்டுள்ளார்.
முக்கிய வீரர்களின் பிடிகளை வீரர்கள் தவறவிடும் பட்சத்தில் அணிக்கு அது பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை பங்ளாதேஷ் அணி இழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment