Friday, December 23, 2011

இந்திய அணி வீரர்களுக்கு பிளட்சர் அறிவுரை

அவுஸ்திரேலிய வீரர்கள் மற்றும் உள்ளூர் மீடியாவின் தூண்டுதலுக்கு இந்திய இளம் வீரர்கள் பலியாகி விடக்கூடாது. தொடர் முடியும் வரை பொறுமையாக இருந்து சாதிக்க வேண்டும் என வீரர்களுக்கு இந்திய அணியின் பயிற்சியாளர் பிளட்சர் அறிவுரை வழங்கியுள்ளார்.
இதுவரை 100க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் பயிற்சியாளராக இருந்தவர் பிளட்சர். தற்போது இந்தியாவுக்காக சென்றுள்ள இவர் மிகுந்த அனுபவம் வாய்ந்தவர்.
கடந்த முறை இங்கிலாந்து அணியுடன் இவர் சென்ற போது, 87 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவுக்கு மோசமான தோல்வியை சந்தித்தது.
இதுகுறித்து தி ஹெரால்டு சன் என்ற பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, அணியின் மூத்த வீரர்களுக்கு மீடியா மற்றும் களத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது நன்கு தெரியும்.
இதனால் இளம் வீரர்களுக்கு பிளட்சர் ஏகப்பட்ட அறிவுரைகள் வழங்கினார். களத்தில் யாருடனும் மோதக் கூடாது. அமைதியாக இருக்க வேண்டும். மீடியாவிடம் பேசும் போது, வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். உங்களின் கோபத்தை துடுப்பாட்டம், பந்துவீச்சின் போது வெளிப்படுத்துங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment