
நேற்று முன்தினம்(12.12.2011) இந்திய கிரிக்கட் வீரர் ஹர்பஜன் சிங் தனது நண்பருடன் டெல்லி வந்தார். இவர் கர்னால் அருகில் உள்ள மதுபான் என்ற இடத்தில் காரை நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றார்.
அப்போது அங்குவந்த மர்ம கும்பல் ஹர்பஜன் காரின் கண்ணாடியை உடைத்து கடவுச்சீட்டு, பணம், ஓட்டுநர் உரிமம், கடனட்டை உட்பட பல விலை மதிப்பு மிக்க முக்கிய ஆவணங்களை திருடிச் சென்றனர். இத்திருட்டு குறித்து கர்னால் காவல்துறையினரால் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர் நேற்று கர்னாலில் உள்ள செக்டர் 13 என்ற இடத்தில் இந்த முக்கிய ஆவணங்களை கண்டுபிடித்தனர்.
இதில் 5 கடனட்டை மற்றும் அவரது உறவினரின் ஒரு கிரீன் கார்டு ஆகியவை இருந்தன. ஆனால் ரூ. 9,500 பணம்(இந்திய ரூபாய்), கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் இல்லை.
காணமல் போன எஞ்சிய பொருட்கள் மற்றும் திருட்டு கும்பலை கண்டுபிடிக்க ஐந்து குழுவாக காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விரைவில் இவர்கள் பிடிபடுவார்கள் என கர்னால் காவல்துறை உயரதிகாரி ஜோகிந்தர் ராதி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment