Saturday, February 25, 2012

அனில் கும்ளே மீது மோசடி வழக்கு: உயர்நீதிமன்றம் விசாரணை

இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் அணித்தலைவர் அனில் கும்ளே மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர் மீது தொழிலதிபர் குமார் வி. ஜகிர்தார் என்பவர் பாரதிநகர் காவல்நிலையத்தில் மோசடி வழக்கு கொடுத்துள்ளார்.
இந்த வழக்கில் கூறப்பட்டுள்ளதாவது, தன்னுடைய முன்னாள் மனைவி சேதனா, அனில் கும்ளே ஆகியோர் எனது மகளின் கடவுச்சீட்டு புதுப்பிப்பதில் முறைகேடு செய்துள்ளனர்.
எனது கையெழுத்தை கும்ளே முறைகேடாக அதில் போட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
இ‌ந்த மனுவை ‌விசா‌ரி‌த்த கர்நாடக உயர் நீதிமன்றம், இது குறித்து விசாரணை நட‌த்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த தொழிலதிபர் குமார் வி. ஜகிர்தார் அனில் கும்ளே மனைவியின் முன்னாள் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment