Saturday, February 18, 2012

முத்தரப்பு தொடரின் நாளைய போட்டி: சேவக் ஓய்வு

முத்தரப்பு தொடரின் நாளைய போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் விரேந்திர சேவக்கிற்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கட் போட்டிகள் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
இந்த முத்தரப்பு ஒருநாள் கிரிக்கட் போட்டியின் ஏழாவது லீக் ஆட்டம் இந்தியா, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை நடைபெறவிருக்கிறது.
நாளைய போட்டியில் இந்திய அணியின் தொடக்க துடுப்பாட்ட வீரர் வீரேந்திர சேவக்கிற்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
அதனால் தொடக்க வீரர்களாக சச்சின் டெண்டுல்கர், கவுதம் காம்பீர் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை தொடக்கவீரராக சச்சின் களமிறங்க இருப்பதன் மூலம், சத சாதனையை இப்போட்டியில் நிகழ்த்துவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

No comments:

Post a Comment