Saturday, February 25, 2012

ஷேவாக்குடன் எந்தவித கருத்து மோதலும் இல்லை: தோனி

இந்திய கிரிக்கட் அணித்தலைவர் தோனி எனக்கும், ஷேவாக்கிற்கும் இடையே எந்த மோதலும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கட் போட்டி தொடர் நடைபெற்று வருகின்றது.
நாளை நடைபெற உள்ள போட்டியில் இந்திய அணி, அவுஸ்திரேலியா அணியுடன் மோதுகிறது. இந்நிலையில் இன்று அணித்தலைவர் தோனி பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
தோனி கூறியதாவது, இந்திய அணி வீரர்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளது என்று பத்திரிகைகள் தவறாக செய்தி வெளியிட்டுள்ளன. அணியின் மூத்த வீரர்கள் குறித்து நான் தவறாக பேசியதாக கூறப்படுகிறது.
இந்த செய்தி எதுவும் உண்மையல்ல. இந்த மாதிரியான செய்திகள் வீரர்களுக்கிடையே தடுமாற்றத்தை உண்டாக்குகிறது.
மேலும் ஷேவாக்குடன் எந்த கருத்து வேறுபாடும் ஏற்படவில்லை. அணியில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம்.
அணியில் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்துள்ளோம். ஒற்றுமையுடன் விளையாடி நாளைய போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே குறிக்கோளாக உள்ளது என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment