Thursday, February 16, 2012

முத்தரப்பு தொடரில் எனக்கு ஓய்வு வேண்டாம்: ஹாரிஸ் வேண்டுகோள்

முத்தரப்பு தொடரில் விளையாடுவதற்கு முழு உடற்தகுதியுடன் உள்ளேன். எனக்கு ஓய்வு வேண்டாம் என ரியான் ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடர் அவுஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.
இதில் அடுத்து வரும் இலங்கை, இந்தியா அணிக்கு எதிரான போட்டிகளில் இருந்து அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிசிற்கு ஓய்வு தரப்பட்டது. இதுகுறித்து ஹாரிஸ் கூறியதாவது, முன்னர் ஏற்பட்ட காயங்களின் போது போதுமான ஓய்வு எடுத்துள்ளேன். இப்போது எனக்கு எவ்வித காயமும் இல்லை. இதை நிரூபிக்கவும் தயாராக உள்ளேன். நான் நன்றாகவே உள்ளேன். இந்நிலையில் அடுத்த இரு போட்டியில் இருந்து எனக்கு ஓய்வு கொடுத்துள்ளனர்.
வேகப்பந்து வீச்சாளர்களை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இப்படி செய்துள்ளனர் என்ற தேர்வாளர்கள் நோக்கம் புரிகிறது. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் ஓய்வு தேவையில்லை. பந்துவீசவில்லை என்றால் சோர்வடைந்து விடுவேன்.
நன்றாக பந்துவீசவில்லை என்றால் உடனடியாக ஓய்வு தரக்கூடாது. இது எனது மனநிலையை எதிர்மறையாக மாற்றிவிடும். தொடர்ந்து விளையாடவே விரும்புகிறேன்.
எனது வேண்டுகோளை கிரிக்கட் ஆஸ்திரேலியா(சி.ஏ) ஏற்றுக் கொள்ள வேண்டும். அடுத்த வாரம் அல்லது அடுத்து என விரைவில் அணிக்கு திரும்புவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
கடந்த 3 போட்டிகளில் 128 ஓட்டங்கள் கொடுத்து, 2 விக்கெட் மட்டுமே ஹாரிஸ் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment