Thursday, February 16, 2012

நடுவர்கள் தவறு செய்வது சகஜம் தான் : ஐசிசி

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை வீரர் மலிங்கா 5 பந்துகள் வீசிய நிலையில் ஓவர் முடிந்ததாக நடுவர் அறிவித்ததை பெரிதுபடுத்த வேண்டாம் என்று சர்வதேச கிரிக்கட் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் நடுவர்கள் குழு இழைத்த இந்தத் தவறு மிகவும் சகஜமானதுதான் என்றும் கூறியுள்ளது.
அவுஸ்திரேலிய கிரிக்கட் வாரிய செய்தித் தொடர்பாளர் டெய்லி டெலிகிராப் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், வீரர்களைப் போன்றே நடுவர்களும் மனிதர்கள் தான். அதனால் சில நேரங்களில் தவறு ஏற்பட்டு விடுகிறது.
நடுவரின் தீர்ப்பை பொறுத்தவரையில் கொடுத்தது கொடுத்ததுதான். அதை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்று கூறியுள்ளார்.
டி.ஆர்.எஸ் முறையை அமுல்படுத்த இந்தியா தொடர்ந்து மறுத்து வருவதும் இந்தத் தவறுக்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
முத்தரப்புத் தொடரில் இலங்கைக்கு எதிராக இந்தியா துடுப்பெடுத்தாடிய போது, ஆட்டத்தின் 30வது ஓவரை மலிங்கா வீசினார்.
5 பந்துகள் வீசிய நிலையில் ஓவர் முடிந்ததாக நடுவர் நைஜெல் லாங் அறிவித்தார். அந்த ஓவரில் இந்தியா 9 ஓட்டங்கள் எடுத்திருந்தது. ஆட்டம் சமநிலையில் முடிந்ததால் இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment