Friday, February 3, 2012

இந்தியாவின் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி : அவுஸ்திரேலியாவை வென்றது இந்தியா

அவுஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது இருபது20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது.
மெல்பேர்ன் நகரில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 19.4 ஓவர்களில் 131 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. ஆரோன் பின்ச் 23 பந்துகளில் 36 ஓட்டங்களையும் மத்தியூ வாட் 29 பந்துகளில் 32 ஓட்டங்களையும் டேவிட் ஹஸி 24 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்திய பந்துவீச்சாளர்களில் பிரவீன் குமார் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் ராகுல் சர்மா 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 16.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றது.
இந்திய அணியின் சார்பில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கௌதம் காம்பீர் 60 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களைப் பெற்றார்.
வீரேந்தர் ஷேவாக் 16 பந்துகளில் 23 ஓட்டங்களையும் வீரட் கோலி 24 பந்துகளில் 31 ஓட்டங்களையும் அணித்தலைவர் டோனி 18 பந்துகளில் 21 ஓட்டங்களையும் பெற்றனர்.
2 போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றியீட்டியது. அதனால் இத்தொடர் 1-1 விகிதத்தில் சமநிலையில் முடிவுற்றது.

No comments:

Post a Comment