Saturday, February 18, 2012

இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் கிளார்க் ஓய்வு

இந்தியாவுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் பங்கேற்க மாட்டார்.
இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கட் போட்டிகள் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
இந்த முத்தரப்பு ஒருநாள் கிரிக்கட் போட்டியின் ஏழாவது லீக் ஆட்டம் இந்தியா, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை நடைபெறவிருக்கிறது.
கால் தசைநாரில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக மைக்கேல் கிளார்க் ஞாயிற்றுக்கிழமை பிரிஸ்பேனில் நடக்க இருக்கும் இந்தியாவுக்கெதிரான போட்டியிலும் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயம் முழுமையாக குணமடைந்த பின்னர் தான் விளையாட விரும்புவதாக கிளார்க் தெரிவித்துள்ளார். கிளார்க் விளையாடாத பட்சத்தில் பிரிஸ்பேன் ஒருநாள் போட்டிக்கும் பாண்டிங்கே அணித்தலைவராக இருப்பார்.
இந்நிலையில் இளம் அவுஸ்திரேலிய வீரரான மிட்செல் மார்ஷ் கீழ்முதுகில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவு காரணமாக அடுத்த 6 மாதங்களுக்கு விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
20 வயதான மார்ஷ் நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது முதுகுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மார்ஷின் கீழ் முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளனர்.
மார்ஷுக்கு ஏற்பட்டுள்ள காயத்தின் தன்மையை நாளை பரிசோதிப்பதாகக் கூறியுள்ள மருத்துவர்கள் அடுத்த 6 மாதங்களுக்கு அவர் விளையாட முடியாத நிலை ஏற்படும் எனவும் தெரித்துள்ளனர்.

No comments:

Post a Comment