Thursday, February 16, 2012

இளம் பந்துவீச்சாளர்களை தேடும் பணியில் பிசிசிஐ

இளம் பந்துவீச்சாளர்களை இந்திய அணிக்கு தேடும் பணியில் இந்திய கிரிக்கட் வாரியம் ஈடுபட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக பல்வேறு இடங்களில் தேசிய கிரிக்கட் அகாதெமியின் உறுப்பினர்களால் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
ஜம்மு காஷ்மீர், இமாசலப் பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய பகுதிகளில் இந்த முகாம்கள் நடைபெறவிருக்கின்றன. 17 முதல் 22 வயதுக்குட்பட்டவர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம் என்று இந்திய கிரிக்கட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 18, 19 ஆகிய திகதிகளில் தர்மசாலாவிலும், 22, 23 ஆகிய திகதிகளில் ஜம்முவிலும், 25, 26 ஆகிய திகதிகளில் ராஞ்சியிலும், 28, 29 ஆகிய திகதிகளில் ராய்ப்பூரிலும் தெரிவு முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமை முன்னாள் டெஸ்ட் கிரிக்கட் வீரர் கர்சன் காவ்ரி, யோகிந்தர் புரி ஆகியோர் கண்காணித்து திறமையான வீரர்களின் பட்டியலை இறுதி செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment