Friday, March 2, 2012

இந்திய அணியிலிருந்து விலக்கப்பட்டது ஏன்: ஷேவாக் விளக்கம்

ஆசிய கிண்ணக் கிரிக்கட் தொடருக்கான இந்திய அணியிலிருந்து ஷேவாக் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவரது நீக்கம் குறித்து பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் தனது நீக்கம் குறித்து ஷேவாக் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து ஷேவாக் கூறுகையில், எனக்கு முதுகுப் பகுதியில் பிடிப்பு இருந்தது. நான் தான் ஓய்வு கேட்டேன்.
எனது காயம் பற்றி அனைவருக்கும் தெரியும். உடற்தகுதியை பொறுத்தவரை அணி நிர்வாகத்திடம் மறைத்தது இல்லை. முன்பு தோள்பட்டை காயத்துக்கு கூட அப்போதைய பயிற்சியாளர் கிறிஸ்டன், தோனியிடம் ஆலோசித்த பின் தான் சிகிச்சை செய்து கொண்டேன் என்றார்.
ஷேவாக் தானாகவே ஓய்வு கேட்டிருந்தால், அதனை தெரிவுக் குழு தலைவர் ஸ்ரீகாந்த் அப்படியே கூறியிருக்கலாம்.
மாறாக நிருபர்களிடம் இவர், பிசியோதெரபிஸ்ட் ஆலோசனைப்படி தான் ஓய்வு அளிக்கப்பட்டதாக கூறினார். தவிர ஷேவாக்கிற்கு தோள்பட்டை காயம் என்று தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
உண்மையில் ஷேவாக் முதுகுப்பிடிப்பால் அவதிப்படுகிறாரா, தோள்பட்டை காயமா அல்லது தோனியின் நிர்பந்தத்துக்கு பணிந்து இந்திய கிரிக்கட் வாரியம் கட்டாய ஓய்வு கொடுத்ததா என்ற குழப்பம் நீடிக்கிறது.
இதுமட்டுமல்லாமல் காம்பீருக்கு துணை அணித்தலைவர் பதவி அளிக்கப்படாமல் விராட் ஹோக்லிக்கு வழங்கப்பட்டுள்ளது. தோனிக்கு எதிரான கருத்துகளை தெரிவித்ததால் இந்த வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment