Friday, March 2, 2012

நியூசிலாந்து அணி வீரர்களுக்கு ஒருநாள் போட்டியில் பங்கேற்க தடை

நியூசிலாந்து கிரிக்கட் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக மது அருந்திய ஜெசி ரைடர், டக் பிரேஸ்வெல் ஆகியோருக்கு ஒருநாள் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து கிரிக்கட் விதிமுறைப்படி காயம் அடைந்த வீரர்கள் மது அருந்தக் கூடாது. இதனை மீறிய இருவரும் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து நியூசிலாந்து கிரிக்கட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், நேப்பியரில் உள்ள ஓட்டலில் ரைடர், பிரேஸ்வெல் மது குடித்தது தெரியவந்தது. போதையில் இவர்கள் பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்காக வருத்தம் தெரிவித்தனர்.
ஆனாலும் காயம் அடைந்த வீரர்கள் மது குடிக்கக் கூடாது. விதிமுறையை மீறிய இவர்கள், நாளை நடக்க உள்ள தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேஸ்வெல் தொடை பிடிப்பாலும், ரைடரின் கையில் லேசான காயத்தாலும் அவதிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment