Saturday, January 7, 2012

தனிப்பட்ட சாதனைகளைவிட அணியின் வெற்றியே அவசியம் : கிளார்க்







தனிப்பட்ட சாதனைகளைவிட அணியின் வெற்றியே தமக்கு அவசியம் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் மைக்கல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 329 ஓட்டங்களை குவித்திருந்தபோது முதல் இன்னிங்ஸை நிறுத்திக்கொள்வதாக அவர் அறிவித்ததை அடுத்து மைக்கல் கிளார்க்கின் இந்த தீர்மானம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இன்னிங்ஸ் ஒன்றில் அதிகபட்சமாக சேர். பிரட்மன் 334 ஓட்டங்களைப் பெற்றதுடன் சில வருடங்கள் கழித்து மார்க் டெய்லர் 334 ஒட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்று பிரட்மனை விஞ்சக்கூடாது எனக் கருதி தனது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டிருந்தார்.
இதுபோன்றதொரு எண்ணத்திலா கிளார்க்கும் ஆட்டத்தை இடையில் நிறுத்தியிருப்பார் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதினர். எனினும் அந்த சந்தர்ப்பத்தில் தமக்கு பிரட்மனோ அல்லது டெய்ரோ நினைவுக்கு வரவில்லை எனவும், அணியின் வெற்றியை கருத்திற்கொண்டே 329
ஓட்டங்களுடன் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டதாகவும் கிளார்க் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment