Wednesday, January 4, 2012

சிட்னி டெஸ்ட்: திணறும் இந்திய அணி பந்துவீச்சாளர்கள்

சிட்னி டெஸ்டில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் கிளார்க் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
இந்திய வீரர்கள் திணறலான பந்துவீச்சை வெளிப்படுத்த, அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 291 ஓட்டங்கள் எடுத்து முன்னிலை பெற்றது.
இந்தியா, அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் சிட்னியில் நடக்கிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 191 ஓட்டங்கள் எடுத்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில், அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 116 ஓட்டங்கள் எடுத்திருந்தது. பொண்டிங் 44 ஓட்டங்களுடனும், கிளார்க் 47 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. பொண்டிங், கிளார்க் இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்களை பிரிக்க தோனி எடுத்த முயற்சிகள் பலிக்கவில்லை. கிளார்க், சர்வதேச அரங்கில் 18வது சதம் கடந்தார். 40வது சதம் அடித்த பொண்டிங், 134 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து அசத்திய கிளார்க், சர்வதேச அரங்கில் முதன் முதலாக இரட்டை சதம் அடித்து மிரட்டினார். ஹசி 28வது அரைசதம் கடந்தார்.
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 482 ஓட்டங்கள் எடுத்து, 291 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருந்தது. கிளார்க் 251 ஓட்டங்களுடன், ஹசி 55 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

No comments:

Post a Comment