Sunday, January 8, 2012

முரளிதரன் இன்றி வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெற்றுள்ளோம் : டில்ஷான்

தமது அணி தொடர்பான விமர்சனங்களுக்கு மத்தியில் டேர்பனில் இடம்பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்றமை அழிக்க முடியாத ஒன்றென இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் டி.எம்.டில்ஷான் கூறியுள்ளார்.
முரளி ஒய்வு பெற்ற பின்னர் இலங்கைக்கு வெளியே இலங்கை அணியால் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற முடியாது என அனைவரும் எண்ணியிருந்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தமது அணியால் அதனை செய்ய முடியும் என அனைவராலும் தற்போது புரிந்து கொள்ள முடியும் எனவும் டில்ஷான் கூறியுள்ளார்.
எனினும் மூன்று போட்டிகளை கொண்ட இந்த தொடரில் இரண்டுக்கு ஒன்று என்ற ஆட்டக்கணக்கில் இலங்கை அணி தொடரை இழந்திருந்தது.
அணியாக இந்த தோல்விக்கான பொறுப்பினை தாம் ஏற்றுக் கொள்வதாக கேப்டவுணில் நிறைவடைந்த மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் பின்னர் டில்ஷான் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இறுதி டெஸ்ட் போட்டியில் ஒரணியாக இணைந்து சிறந்த முறையில் பந்துவீசியமையே போட்டியில் வெற்றிபெற காரணம் என தென்னாபிரிக்க அணித் தலைவர் கூறியுள்ளார்.
அனைத்து பந்துவீச்சாளர்களும் சிறப்பான முறையில் செயற்பட்டதன் காரணமாக இலங்கை அணிக்கு அழுத்தம் கொடுக்க முடிந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்மூலம் 2008 ஆம் ஆண்டிற்கு பின்னர் சொந்த மண்ணில் வைத்து டெஸ்ட் கிரிக்கெட் தொடரை தென்னாபிரிக்க அணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது,

No comments:

Post a Comment