Tuesday, January 3, 2012

தவறுகளைத் திருத்திக்கொண்டு தமது அணி சிறப்பாக விளையாடும் : தோனி

முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இழைக்கப்பட்ட தவறுகளை திருத்திக்கொண்டு சிட்னியில் நாளை ஆரம்பமாகவுள்ள இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தமது அணி சிறப்பாக விளையாடும் என இந்திய அணியின் தலைவர் மஹேந்திர சிங் டோனி தெரிவித்துள்ளார்.
தமது அணியின் துடுப்பாட்ட வீரர்கள் அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு சவாலாக அமைவார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா ஒன்றுக்கு பூச்சியம் என தொடரில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment