Saturday, January 7, 2012

துடுப்பாட்ட வீரர்கள் பிரகாசிக்கத் தவறியமையே தோல்வியடையக் காரணம் : தோனி

முதல் இன்னிங்ஸில் தமது துடுப்பாட்ட வீரர்கள் பிரகாசிக்கத் தவறியமை அவுஸ்திரேலியாவுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வியடையக் காரணம் என்று அணித் தலைவர் மஹேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
அத்துடன் மைக்கல் கிளார்க்கின் துடுப்பாட்டத்தை கட்டுப்படுத்த தவறியமை மற்றுமொரு காரணம் என்று தோனி சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாட்டு மைதானங்களில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றிபெற கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுவருகின்ற போதிலும், அண்மைக்காலமாக இந்திய அணியால் வெற்றியைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
சிட்னியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியாவிடம் ஒரு இன்னிங்ஸாலும் 68 ஓட்டங்களாலும் இந்தியா தோல்வியடைந்திருந்தது.

No comments:

Post a Comment