Sunday, January 8, 2012

அவுஸ்திரேலிய ரசிகர்களிடையே அதிகரித்திருக்கும் டெஸ்ட் போட்டிகள் மீதான ஆர்வம்

இந்தியா - அவுஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டியை அவுஸ்திரேலியாவில் மட்டும் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் டி.வி.யில் பார்த்து ரசித்துள்ளனர்.
இது இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடரை டி.வி.யில் பார்த்த ரசிகர்களின் எண்ணிக்கையை விட சுமார் 4 லட்சம் அதிகமாகும். பொதுவாக ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்தான் அவுஸ்திரேலியாவில் பிரபலமானது.
இதில் வெற்றி பெறுவதை அவுஸ்திரேலியர்கள் மிகப் பெரும் கெளரவமாகக் கருதுவார்கள். இதனால் அப்போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கும்.
ஆனால் இப்போது நடைபெற்று வரும் இந்தியா - அவுஸ்திரேலியா டெஸ்ட் தொடர் அதைவிட அதிகமாக ரசிகர்களை ஈர்த்துள்ளது.
இந்தியாவில் முன்னணி துடுப்பாட்டக்காரர்களான சச்சின், சேவாக், திராவிட், லட்சுமண் ஆகியோரை அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் அதிக ரன் குவிக்க விடாமல் தடுத்தது. ரிக்கி பொண்டிங், ஹசி, கிளார்க் போன்றவர்களின் அபார ஆட்டம் ஆகியவையும் இப்போட்டிக்கு அதிக ரசிகர்களைப் பெற்றுத் தந்துள்ளது என்று டெய்லி டெலிகிராப் பத்திரிகை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment