Friday, January 6, 2012

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி திணறல் ஆட்டம்

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 239 ஓட்டங்களுக்கு சுருண்ட இலங்கை அணி பாலோ-ஆன் பெற்றது.
தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கேப்டவுனில் நடக்கிறது.
முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 4 விக்கெட்டுக்கு 580 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பின் முதல் இன்னிங்சை தொடக்கிய இலங்கை அணி, இரண்டாம் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 149 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணியை தென் ஆப்ரிக்க வேகங்கள் போட்டுத்தாக்கினர்.
ஸ்டைன் பந்தில் சங்ககரா(35), மகிளா ஜெயவர்தனா(30), மாத்யூஸ்(1) வெளியேறினர். பிலாண்டர் வேகத்தில் சமரவீரா(11), ஹெராத்(1), தமிகா பிரசாத்(9) நடையை கட்டினர்.
கடைசி நேரத்தில் சண்டிமால்(35) ஓரளவு ஆறுதல் அளிக்க முதல் இன்னிங்சில் இலங்கை அணி 239 ஓட்டங்களுக்கு சுருண்டு பாலோ-ஆன் பெற்றது. தென் ஆப்ரிக்கா சார்பில் ஸ்டைன், பிலாண்டர் தலா 3, இம்ரான் தாகிர், மார்னே மார்கல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 
பின் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணித்தலைவர் தில்ஷன்(5), பிலாண்டர் வேகத்தில் ஆட்டமிழந்தார்.
மற்றொரு துவக்க வீரர் திரிமன்னே(30), சங்ககரா(34), மகிளா ஜெயவர்தனா(12) பெரிய அளவில் சோபிக்கவில்லை. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்கு 138 ஓட்டங்கள் எடுத்து, 203 ஓட்டங்கள் பின்தங்கி இருந்தது.
சமரவீரா(19), மாத்யூஸ்(28) ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்ரிக்கா சார்பில் பிலாண்டர், மார்னே மார்கல், இம்ரான் தாகிர், காலிஸ் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

No comments:

Post a Comment