Tuesday, January 3, 2012

தீர்க்கமான மூன்றாவது டெஸ்ட் இன்று : இலங்கை - தென்னாபிரிக்க அணிகள் மோதல்


தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் மோதும் 3வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, கேப்டவுன் மைதானத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது.
முதல் இரு போட்டிகளில் தலா ஒவ்வொரு வெற்றியைப் பெற்றுள்ள இவ்விரு அணிக்கும் இன்று ஆரம்பமாகவுள்ள இறுதி டெஸ்ட் சவால்மிக்கதாகும்.
இந்த போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் இருந்து ஆஷ்வெல் பிரின்ஸ் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அல்விரோ பீட்டர்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.
காயம் காரணமாக டர்பன் டெஸ்டில் விளையாடாத வேகப்பந்து வீச்சாளர் வெர்னான் பிலேண்டர், முழு உடல்தகுதியுடன் விளையாடத் தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை அணியின் தினேஷ் சந்திமால் மற்றும் தில்ஹார பெனாண்டோ ஆகியோர் உபாதைக்கு உள்ளாகியிருப்பதால் இன்றைய போட்டியில் விளையாடுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.

No comments:

Post a Comment