Thursday, April 5, 2012

வலுவான நிலையில் இங்கிலாந்து

கொழும்பு டெஸ்டில் கெவின் பீட்டர்சன் சதம் அடிக்க இங்கிலாந்து அணி, 181 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.
இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 275 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டுக்கு 154 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. இங்கிலாந்து அணியின் டிராட், குக் அபார ஆட்டத்தை தொடர்ந்தனர். குக்(94), சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார். ஹெராத் சுழலில் டிராட்(64) சிக்கினார்.
பின் அசத்தலாக ஆடிய பீட்டர்சன், டெஸ்ட் அரங்கில் தனது 20வது சதம் அடித்தார். இவர் 151 ஓட்டங்களுக்கு ஹெராத் பந்தில் வீழ்ந்தார்.
இயான் பெல்(18), பிரையார்(11) சோபிக்கவில்லை. சமித் படேல் 29 ஓட்டங்கள் எடுத்தார். இறுதியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 460 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 185 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. இலங்கை சார்பில் ஹெராத் 6 விக்கெட், தில்ஷன் 2 விக்கெட் வீழ்த்தினர்.
பின் இரண்டாவது இன்னிங்சை தொடக்கிய இலங்கை அணி, ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ஓட்டங்கள் எடுத்திருந்தது. தற்போது 181 ஓட்டங்கள் பின்தங்கியிருக்கும் இலங்கை அணி, இக்கட்டான நிலையில் உள்ளது.

No comments:

Post a Comment