Monday, April 9, 2012

அடிபட்ட தனது கைவிரல் படத்தை வெளியிட்டார் சச்சின்

ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியில் விளையாடிய மும்பை அணியின் மூத்த வீரர் சச்சின் டெண்டுல்கர்கருக்கு கை விரலில் காயம் ஏற்பட்டதால் இன்றைய போட்டியில் அவர் விளையாடுவதில் சந்தேகம் நிலவி வருகிறது.
ஐந்தாவது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் மும்பை இண்டியன்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கர். இவர் கடந்த 4ம் திகதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக நடைபெற்ற முதல் லீக் போட்டியில் பங்கேற்றார்.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் போலிஞ்சர் வீசிய 9வது ஓவரின் 5வது பந்து, சச்சினின் கை விரலில் பட்டு காயமானது.
இதனையடுத்து அப்போட்டியில் 16 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த சச்சின், தொடர்ந்து துடுப்பெடுத்தாட முடியாமல் ஓய்வு பெற்று கொண்டார்.
இதனால் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் சச்சின் பங்கேற்கவில்லை. சச்சினுக்கு விரலில் தொடர்ந்து வலி இருப்பதால், இன்றைய போட்டியிலும் பங்கேற்பாரா என்ற சந்தேகம் நீடிக்கிறது.
இந்நிலையில் டுவிட்டரில் காயமடைந்த தனது கை விரலின் படத்தை வெளியிட்டுள்ள சச்சின் கூறியிருப்பதாவது, கடந்த நான்கு நாட்களாக எனது கைவிரலில் உள்ள ரத்த அழுக்குகளை தினமும் இரண்டு முறை நீக்கி வருகிறேன். இன்னும் எனது கை விரல் குணமாகவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment