Monday, April 9, 2012

மோசமான துடுப்பாட்டத்தால் தோல்வியடைந்தோம்: கம்பீர்

துடுப்பாட்டம் சரியில்லாததால் தான் தோல்வியடைந்தோம் என்று தொடர் தோல்வியை சந்தித்து வரும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் அணித்தலைவர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
ஐந்தாவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் றொயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ஓட்டங்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 142 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
கூப்பர் 3 விக்கெட்டும், அமித்சிங், சுவான், திரிவேதி தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
கொல்கத்தா அணி தொடர்ந்து 2வது தோல்வியை தழுவியது. தொடக்க ஆட்டத்தில் டெல்லியிடம் தோல்வியடைந்தது.
இந்த தோல்வி குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித்தலைவர் கவுதம் கம்பீர் கூறுகையில், மோசமான துடுப்பாட்டத்தால் தான் தோல்வியடைந்தோம்.
எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி ராஜஸ்தானை 164 ஓட்டத்துக்குள் கட்டுப்படுத்தினர். ஆடுகளம் துடுப்பாட்டத்துக்கு சாதகமாக இருந்தும் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.
எங்கள் அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். ஒரு வெற்றி பெற்றால் நாங்கள் முன்னுக்கு வந்துவிடுவோம். 14 போட்டியில் 2 ஆட்டத்தில் தோற்றதை வைத்து நெருக்கடி என்று சொல்லி விட இயலாது என்றும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment