Monday, April 9, 2012

ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்காதது மகிழ்ச்சி: பிலான்டர்

ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்று விளையாடாதது தனக்கு மகிழ்ச்சி என்று தென் ஆப்ரிக்க அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் வெர்னன் பிலான்டர் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டுக்கான ஐ.பி.எல் ஏலத்தில் 200,000 அமெரிக்க டொலர்கள் அடிப்படை விலையைக் கொண்டிருந்த பிலான்டர், எந்த ஒரு அணிகளின் கவனத்தை ஈர்த்திருக்கவில்லை. ஏலத்தில் எந்தவொரு அணியாலும் வாங்கப்பட்டிருக்கவில்லை.
ஐ.பி.எல். போட்டிகளில் பிலான்டர் தெரிவு செய்யப்படாததால் தற்போது அவர் இங்கிலாந்தில் பிராந்தியப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
ஐ.பி.எல்லில் பங்கேற்காததால் நன்மைகளும் காணப்படுகின்றன, தீமைகளும் காணப்படுகின்றன எனத் தெரிவித்த பிலான்டர், இவ்வாண்டு தான் தெரிவு செய்யப்படாமை தனக்கு சாதகமானது என்று தெரிவித்தார்.
இவ்வாண்டு யூலையில் தென் ஆப்ரிக்க அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அதற்குரிய சிறந்த பயிற்சியாக இங்கிலாந்துப் பிராந்திய அணிகளில் விளையாடிய அனுபவம் பிலான்டருக்குக் காணப்படும் எனக் கருதப்படுகிறது.
7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பிலான்டர், இதுவரை 51 டெஸ்ட் விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பந்துவீச்சாளரொருவர் 50 விக்கெட்டுக்களை வேகமாகப் கைப்பற்றியதில் பிலான்டர் இரண்டாவது நிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

No comments:

Post a Comment