Thursday, April 5, 2012

காயம் காரணமாக ஐ.பி.எல் போட்டிகளில் ஸ்ரீசாந்த் விளையாட மாட்டார்: டிராவிட்

காயமடைந்துள்ள வேகப்பந்து வீச்சாளர் சாந்தகுமாரன் ஸ்ரீசாந்த், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் மூன்று போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்று ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ராகுல் டிராவிட், ஶ்ரீசாந்த் இன்னமும் முழுமையாகக் குணமடையவில்லை எனத் தெரிவித்தார்.
தனது உடற்தகுதி தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஶ்ரீசாந்த், பந்து வீசி பயிற்சி எடுத்தபோது கஷ்டத்தை உணர்ந்ததாக தெரிவித்தார். அத்தொடு 3-4 வாரங்களுக்குத் தான் போட்டிகளில் பங்குபற்ற முடியாத நிலை ஏற்படலாம் என்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீசாந்த் தவிர, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி ஷேன் வொற்சன், டினேஷ் சந்திமால் ஆகிய வெளிநாட்டு வீரர்களையும் ஆரம்பகட்டப் போட்டிகளில் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.
அவுஸ்திரேலிய அணி - மேற்கிந்தியத் தீவுகளுக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் டெஸ்ட் போட்டிகளில் 27ம் திகதியே நிறைவடையவுள்ள நிலையில் பெரும்பாலான போட்டிகளில் அவர் பங்குபற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மறுபுறத்தில் இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி இடம்பெற்று வருவதால் அப்போட்டி முடிவடையும் வரை டினேஷ் சந்திமால் - ஐ.பி.எல். போட்டிகளில் பங்குபற்ற முடியாத நிலை காணப்படுகிறது.

No comments:

Post a Comment