
5 நிமிடங்கள் மட்டுமே ஓடும் இந்த படத்தில் மேட்ச்-பிக்ஸிங்கில் சிக்கி சிறைத் தண்டனை பெற்றவரான பாகிஸ்தானின் இளம் கிரிக்கெட் வீரர் முகமது ஆமிர் தோன்றுகிறார்.
அதில் மிகவும் உருக்கமாக பேசியுள்ள ஆமிர், சிறை வாழ்க்கை என்பது எல்லோருக்கும் மிக மோசமான இடம். நான் செய்த தவறை யாரும் செய்யாதீர்கள். நான் முட்டாள் ஆக்கப்பட்டேன். எனக்கு துணிவு இல்லாததால் என்னை சூதாட்டக்காரர்கள் அணுகியதை யாரிடமும் சொல்லவில்லை.
எனவே வீரர்களாகிய உங்களை சூதாட்டக்காரர்கள் யாராவது அணுகினால் உடனடியாக ஐசிசி குழுவிடமோ அல்லது உங்களின் அணி நிர்வாகத்திடமோ தெரிவியுங்கள். அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.
இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டியில் நான் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய போதும், 2 நோபால்களை வீசியதன் விளைவால் அடுத்த சில மணி நேரங்களில் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையே சீரழிந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியபோது, நோபால்களை வீசுவதற்கு சூதாட்டத் தரகர்களிடம் இருந்து பணம் பெற்றதாக பாகிஸ்தான் அணியின் அப்போதைய அணித்தலைவர் சல்மான் பட், வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஆசிப், முகமது ஆமிர் ஆகியோர் சிக்கினர்.
இதுதொடர்பாக விசாரித்த லண்டன் நீதிமன்றம், சல்மான் பட்டுக்கு 30 மாதங்களும், முகமது ஆசிபுக்கு ஓர் ஆண்டும், முகமது ஆமிருக்கு 6 மாதங்களும் சிறைத் தண்டனை விதித்தது.
இவர்களில் ஆமிர் மட்டும் 3 மாதங்கள் மட்டுமே தண்டனையை அனுபவித்த நிலையில் நன்னடத்தை அடிப்படையில் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment